×

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்று கொண்டனர்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு, வினா-விடை போட்டி, ஊழல் வேண்டாம் என்று சொல்லி தேசத்திற்கு அற்பணி என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடத்துதல், விழிப்புணர்வு நிகழ்வு நடத்துதல் ஆகியவை நடைபெறும்.

இந்த ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் காவல்த்துறை கண்காணிப்பாளரும் தலைமை பாதுகாப்பு அதிகாரியான எச்.ஜெயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தலைமை பொது மேலாளர் முரளி (நிதி), தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலர் டி.பி.வினோத் குமார், மின் கண்காணிப்பு பொறியாளர் பி.அருள்மணி, பொது மேலாளர்கள் பி.சுரேஷ், ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, ஆர்.ரங்கநாதன், எம்.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Sardar Vallabhbhai Patel ,CHENNAI ,Chennai Metro Rail Company ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...